சுனாமி கிரிக்கெட் ஏப்ரலுக்கு ஒத்தி வைப்பு
கொல்கத்தா:
கொல்கத்தா-வில் நடைபெறுவதாக இருந்த இரண்டாவது சுனாமி கிரிக்கெட் போட்டியை ஐ.சி.சி ஒத்தி வைத்துள்ளது.
சுனாமி நிவாரண நிதிக்காக உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையே 2 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்தஐ.சி.சி. முடிவு செய்தது. முதல் போட்டி கடந்த மாதம் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் உலக லெவன் அணி வெற்றி பெற்றது.
இந்திய அரசு முழு வரி விலக்கு 2வது போட்டியை கொல்கத்தாவில் நடத்த ஐ.சி.சி விருப்பம் தெரிவித்தது. மத்திய அரசும் முழு வரிவிலக்குஅளிக்க முன்வந்தது. இதையடுத்து பிப்ரவரி 13ம் தேதி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
இந் நிலையில் போட்டியை ஒத்தி-வைப்ப-தாக ஐ.சி.சி தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் அறி-வித்தார். அவர் கூறு-கை-யில், முன்னணி வீரர்கள்அனைவரும் பிஸி-யாக உள்ளனர். இங்கி-லாந்து அணி தற்போது தென் ஆப்பிரிக்கா-வில் விளை-யாடி வரு-கி-றது.
விரைவில் ஆஸ்திரேலியா, நியூ-சிலாந்து அணிகளுக்கு இடை-யே தொடர் துவங்கவிருக்கிறது. இருப்பி-னும் சுனாமி போட்டி நடத்தப்படவேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். அதனால் வீரர்க-ளின் வசதிக்கு ஏற்ப வரும் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில்கொல்கத்தாவில் போட்டி நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications