84 நாட்களுக்குப் பின் ஜெயேந்திரர்-விஜயேந்திரர் நேருக்கு நேர்!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Jeyandrarசங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேருக்கும் வரும் பிப்ரவரி 3ம் தேதி குற்றப் பத்திரிக்கை நகல்வழங்கப்படவுள்ளது. இதற்காக அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஜெயேந்திரர் இப்போது ஜாமீனில் கலவையில் தங்கியிருக்கும் நிலையில், விஜயேந்திரர், ரகு, அப்பு, அப்ரூவராகிவிட்ட ரவிசுப்பிரமணியம், சுந்தரேச அய்யர், கூலிப் படையினர், போலி குற்றவாளிகள் அனைவரும் சென்னை மற்றும் கடலூர் சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது ஏற்கனவே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிலையில் அதன் நகலை அனைவரிடமும் நீதிமன்றம் தனித்தனியாகவழங்க வேண்டும். இதற்காக வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 3ம் தேதி) இவர்கள் காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

நவம்பர் 11ம் தேதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் வெளியே வந்த டிசம்பரி 10ம் தேதி இளையவர் கைதுசெய்யப்பட்டுவிட்டார். இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இன்றொடு 79 நாட்களாகிவிட்டது.

Vijayendrarஇந் நிலையில் வரும் 3ம் தேதி இருவரும் 84 நாட்கள் இடைவெளிக்குப் பின் நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றனர்.

போலீஸ் காவலில் இருந்தபோது விஜயேந்திரருக்கு எதிராக ஜெயேந்திரர் கொடுத்த வாக்குமூல வீடியோவை போலீசார் கசிய விட்டதன்மூலம் இருவருக்கும் இடையிலான மனக் கசப்பு வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

இந் நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் இத்தனை நாள் இடைவெளிக்குப் பின் சந்திப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. சிறையில்இருந்த ஜெயேந்திரரை இளையவர் சந்திக்கவில்லை என்பதும் நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+