ஜெ. பிறந்தநாள் வளைவுக்கு தடை கோரி வழக்கு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் சாலையின் குறுக்கே வரவேற்பு வளைவு கட்டதடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சி உறுப்பினர் அப்துல் பாரூக் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில்,
முதல்வர் ஜெயலலிதாவின் 57வது பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் நான்கு சாலை பிரிவு, துரைமங்கலம், மூன்றுசாலை ஆகியவை சந்திக்கும் இடத்தில் வரவேற்பு வளைவு கட்ட நகராட்சி செயல் அதிகாரி அனுமதிவழங்கியுள்ளார்.
தமிழ்நாடு கைத்தறி வளர்க்கி கழக தலைவர் எம்.ரவிச்சந்திரன் இந்த வளைவைக் கட்டுகிறார். இந்த இடம் தேசியநெடுஞ்சாலைக்குச் சொந்தமானது. இந்த இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள்ஆணையகத்திற்குத்தான் அதிகாரம் உள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த வளைவை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இந்த மனுவை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா விசாரித்து அரசு வழக்கறிஞரிடம் அரசின் கருத்தைக்கேட்டார். பிப்ரவரி 4ம் தேதி அரசின் கருத்தைத் தெரிவிப்பதாகவும், அதுவரை கட்டுமானப் பணிகள்நடைபெறாது என்றும் வழக்கறிஞர் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து மனு மீதான விசாரணை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications