ஆலடி அருணா கொலை: பிரபல கல்வி நிறுவன அதிபர் கைது

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

Rajaஆலடி அருணா கொலை வழக்கில் தென் தமிழகத்தின் மிகப் பிரபலமான கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜா இன்று கைதுசெய்யப்பட்டார்.

ஆலடி அருணா கொலை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ பாஸ்கர்,பென்னி ஆகியோர் மர்மமான முறையில் போலீஸ் பிடியில் இறந்தனர். முக்கியக் குற்றவாளியான வேல்துரையிடம் போலீஸார்தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந் நிலையில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் எஸ்.ஏ.ராஜாதான்கொலையாளிகளை ஏவியதாக போலீஸாருக்குத் துப்பு கிடைத்துள்ளது.

ஆனால், இந்தத் தகவலை வேல்துரை உறுதிப்படுத்த மறுத்தான். அவனிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அருணாவைக்கொலை செய்ய ராஜா தான் தூண்டினார் என்று ஒப்புக் கொண்டான்.

இதைத் தொடர்ந்து இன்று வடக்குன்குளம் சென்ற நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் குமார் சோமானி எஸ்.ஏ.ராஜாவை கைதுசெய்தார்.

பின்னர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட எஸ்.ஏ.ராஜா அம்பாசமுத்திரம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக அவரை பலத்தபாதுகாப்புடன் போலீசார் அம்பாசத்திரம் கொண்டு செல்கின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் எஸ்.ஏ.ராஜாவை அப் பகுதியினர் சர்தார் என்றுதான்அழைப்பது வழக்கம்.

ஏற்கனேவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் ராஜா. இவரது மருத்துவக் கல்லூரியில் படித்த ஒரு மாணவி மர்மமான முறையில்இருந்தார். கல்லூ விடுதியில் பாலியல் கொடுமைகள் நடப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

Aladi arunas dead bodyராஜாஸ் பொறியியல் கல்லூரி, ஜெயமாதா பொறியியல் கல்லூரி, ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி, சர்தார் ராஜா பொறியியல்கல்லூரி, சர்தார் ராஜாஸ் கலை அறிவியல் கல்லூரி, இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், ஜோய் சுரேஷ் பொறியியல்கல்லூரி, சர்தார் ராஜா கம்யூனிட்டி காலேஜ், எஸ்ஏ ராஜா பார்மஸி கல்லூரி, ராஜாஸ் தொழில் பயிற்சி மையம், ராஜாஸ்பாலிடெக்னிக் என தென் தமிழகத்தில் கல்விக் கடை பரப்பியவர் ராஜா.

ஏகப்பட்ட பணம், செல்வாக்கு, அடிதடிப் படை என வாழ்ந்து வருபவர். சமீபத்தில் இவரது கல்லூரிகளில் சிலவற்றுக்கு அகிலஇந்திய தொழிநுட்பக் கல்வி கவுன்சிலில் இருந்து சில தடைகள் வந்தன. இவரது கல்லூரிகளில் சில பொறியியல் கல்வித்துறைகளுக்கு தந்த அங்கீகாரத்தை ரத்து செய்தது கவுன்சில். இதற்கு ஆலடி அருணா தான் காரணம் என நினைத்தார் ராஜா.

மேலும் அங்கீகாரம் ரத்தானதால் ராஜாவின் கல்லூரிகளில் இருந்து விலகி வந்த மாணவர்களை அருணா தனது பொறியியல்கல்லூரியில் சேர்த்துள்ளார்.

ந்தப் பின்னணியில் தான் அருணாவின் கொலை நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+