For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிட்டர் வழக்கிலும் விரைவில் குற்றப் பத்திரிக்கை !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Radhakrishnanஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது இன்னும் ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

சங்கர மட ன்னாள் பக்தரான ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஆகியோர் கடந்த 2002ம் ஆண்டு சென்னையில் வீடு புகுந்துசிலரால் தாக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு, சங்கரராமன் கொலைக்குப் பிறகு சூடு பிடித்தது.

ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரவி சுப்பிரமணியம், அப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியில் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குற்றப் பத்திரிக்கை தயாரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாகவும் இன்னும் ஓரு நாட்களில் அது சென்னை சைதாப்பேட்டை குற்றவியல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் காஞ்சி தனிப்படை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சங்கரராமன் கொலை வழக்கில் தமிழக போலீசார் புயல் வேகத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அய்யருக்கு ஜாமீன் கிடைக்குமா?:

இதற்கிடையே ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் ஜாமீன் கோரியுள்ள சுந்தரேச அய்யர், கதிரவன் ஆகியோரின் மனு மீதுஇன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இதேபோல, சங்கரராமன் கொலை வழக்கில் மடத்தின் கணக்காளர் காலடி விஸ்வநாத அய்யர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதும் இன்றுமாலை செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X