பக்ரீத்: ஒட்டக பலியை எதிர்த்து வழக்கு
சென்னை:
பக்ரீத் பண்டிகயையொட்டி சென்னையில் 4 ஒட்டகங்கள் பலி கொடுக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர பாரதவிலங்குகள் நல சங்கம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து இச் சங்கத்தின் நிறுவனச் செயலாளர் செளகர் அஜீஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டிலிருந்து 4 ஒட்டகங்களை வாங்கி வந்து பலி கொடுத்துள்ளார்.
உணவாக சாப்பிடும் பிராணிகள் என்று மத்திய வேளாண்துறை அறிவித்துள்ள பட்டியலில் ஒட்டகம் இடம் பெறவில்லை. அரபு நாடுகளின்சீதோஷ்ண நிலைக்கு ஒட்டகம் சாப்பிடுவது பெரிய விஷயமே இல்லை. ஆனால் இந்தியாவில் இதை ஏற்க முடியாது. இது சட்டவிரோதமானசெயல்.
எனவே இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யவுள்ளோம்.
இதேபோல சேலம் அருகே தைப்பூச திருவிழாவின்போது நரியை பிடித்து வந்து காலில் கயிறு கட்டி விளையாட விட்டுள்ளனர். இதுவும்பிராணி வதையாகும். இதை எதிர்த்தும் வழக்கு தொடரவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications