தனியே கிடந்த குழந்தையின் தலை!
தர்மபுரி:
தர்மபுரியில் குழந்தையின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வீதியில் கிடந்தது. அதை நாய் கவ்விச் சென்றது.
தர்மபுரி காந்தி நகரில் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையை வாயில் கவ்வியபடி நாய் ஒன்று சென்றது. அதைப் பார்த்துஅதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாயை விரட்டினர். அப்போது குழந்தையின் தலையை சாலையில் போட்டு விட்டு நாய் தப்பி ஓடியது.
அந்தக் குழந்தையின் தலை முழுவதும் சேறு இருந்தது. இதற்கிடையே குழந்தையின் உடல் அரசு மருத்துவமனை அருகே இருப்பதாக செய்திபரவியது. இது குறித்து தகவலறிந்த தர்மபுரி டவுன் போலீஸார் அங்கு விரைந்தனர்.
அங்கு புதிதாகப் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி மட்டும் கிடந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அரசு மருத்துவனையில்பிறந்த வேறொரு குழந்தையின் தொப்புள் கொடி இது என்பது தெரியவந்தது.
தலை மட்டுமே கிடைத்த குழந்தை குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.