வீரப்பன் சாவு: சிபிஐ விசாரணை கோரும் மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனது கணவர் வீரப்பன் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முத்துலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக முத்துலட்சுமி தாக்கல் செய்துள்ள மனுவில், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழக அதிரடிப்படைத்தலைவர் விஜயக்குமாரும், கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் ஜோதி பிரகாஷ் மிர்ஜியும் முரண்பாடான தகவல்களை அளித்துவருகின்றனர்.

வீரப்பன் சாவு குறித்து விசாரித்த உண்மை அறியும் குழுவும், பல்வேறு புதிய தகவல்களைக் கொடுத்துள்ளது.

இவையனைத்தும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளன. அதிரடிப்படை தெரிவித்த கருத்துக்கு எதிராக உள்ளது. இதனால் வீரப்பன் எப்படிகொல்லப்பட்டார் என்பது புதிராக உள்ளது. இது தொடர்பாக பொது மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய சிபிஐ விசாரணைக்குஉத்தரவிட வேண்டும். வீரப்பனின் உடலைத் தோண்டியெடுத்துமீண்டும் பிரேதப் பசோதனை செய்ய வேண்டும் என்று தனது மனுவில் முத்துலட்சுமி கூறியுள்ளார்.

முத்துலட்சுமி தாக்கல் செய்த மனுவில் உள்துறை செயலாளர், டிஜிபி, கூடுதல் டிஜிபி, தருமபுரி ஆர்டிஓ, சிபிஐ இணை இயக்குனர்கள்ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+