சேலம்: பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது.
சேலம் சின்னகொள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்துவருகிறார்.
சேலம் பஸ் நிலையம் அருகே ரமேஷ் என்பவருடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது சித்தி மகன் செல்வம் என்பவர் அமிலத்தைபுவனேஸ்வரி மீது ஊற்றி விட்டு ஓடிவிட்டார்.
இதில் படுகாயமடைந்த புவனேஸ்வரி உயிருக்கு போராடும் நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரமேஷை புவனேஸ்வரி காதலித்து வந்ததாகவும் இது விரும்பாத புவனேஸ்வரியின் சித்தி மகன் செல்வம் ஆசிட் வீசியிருக்கலாம் என்றும்தெரிகிறது.
போலீஸ் இது குறித்து வழக்குப் பதிவு செய்து செல்வத்தை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications