தமிழக காங். தலைவர் பதவி: விரைவில் தேர்தல்!
சென்னை:
கோஷ்டி கலாட்டாவுக்குப் பெயர் போன தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கவுள்ளது.
கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த இரண்டாண்டுகளாக நடந்த உறுப்பினர் சேர்க்கையில்ஆயிரக்கணக்கானவர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அக் கட்சி கூறிக் கொள்கிறது.
இதையடுத்து கட்சித் தலைவர் பதவிக்கு வரும் மார்ச் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை நடத்தஅகிலேஷ் தாஸ் எம்.பியை கட்சித் தலைமை பார்வையாளராக நியமித்துள்ளது.
தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வாசனுக்குப் பதிலாக வேறு ஒருவரைத் தலைவராக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது. பெரும்பாலும் அந்த வாய்ப்பு இளங்கோவனுக்கே என்கிறார்கள்.
இதனால் சோனியா காந்தியின் ஆதரவுடன் இளங்கோவன் நிறுத்தப்பட்டு, அவரை ஒருமனதாக தேர்வு செய்ய வைக்கவும் காங்கிரஸ்தலைமை திட்டமிட்டுள்ளது.
இதனால் வாசனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரப்படலாம்.












Click it and Unblock the Notifications