For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சி மட கணக்குகளை திருத்திய விஸ்வநாத அய்யருக்கு ஜாமீன்

By Staff
Google Oneindia Tamil News

செங்கல்பட்டு:

காஞ்சி சங்கர மடத்தின் கணக்காளர் காலடி விஸ்வநாத அய்யரை ஜாமீனில் விடுவிக்க செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

சங்கர மடத்தின் கணக்குகளை திருத்தி எழுதியதாக காலடி விஸ்வநாத அய்யர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்டவிசாரணைக்குப் பின்னர் மேலாளர் சுந்தேரச அய்யரும் கைது செய்யப்பட்டார்.

காலடி விஸ்வநாத அய்யர் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்குவந்தபோது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆறுமுகம் வாதிடுகையில்,

சுந்தரேச அய்யர் கூறியதன் பேரிலேயே கணக்கு புத்தகங்களைத் திருத்தியதாக விஸ்வநாத அய்யர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.மேலும் 9 கணக்குப் புத்தகங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில், கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை, 5வது கணக்குப் புத்தகத்தில் 143, 156, 157 ஆகியபக்கங்களையும், 1.7.2004 முதல் 18.10.2004 வரை 31, 32, 67, 68ம் பக்கங்களையும், 1.4.01 முதல் 27.7.04 வரை 31, 32வதுபக்கங்களையும் திருத்தியுள்ளனர் காலடி அய்யர்.

திருத்தியது தடயவியல் சோதனையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஸ்வநாதனை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது.எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்றார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி அக்பர் அலி, விஸ்வநாதன் ஏற்கனவே 42 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். மேலும், தேவையானஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துவிட்டனர்.

எனவே அவரது முதுமையைக் கருத்தில் கொண்டு ஜாமீனில் விடுதலை செய்கிறேன். ஒரு மாதத்திற்கு தினமும் காலை 10 மணிக்குசிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X