ரூ. 200 கோடி பணிகளுக்கு கருணாநிதி அடிக்கல்
சென்னை:
சென்னை நகரில் ரூ. 200 கோடி மதிப்பிலான மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைப் பணிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று அடிக்கல்நாட்டுகிறார்.
கிண்டி கத்திப்பாரா, பாடி, கோயம்பேடு ஆகிய இடங்களில் அடுக்கு மேம்பாலங்கள் கட்டுவது, விமான நிலையத்திற்கு எதிரே தேசியநெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்படவுள்ள மேம்பாலம், திரிசூலம் ரயில் நிலையத்தையும், விமான நிலையத்தையும் இணைக்கும்வகையிலான புதிய சுரங்கப் பாதை ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.
திரிசூலம் ரயில் நிலையம் அருகே நடக்கும் இந் நிகழ்ச்சியில் கருணாநதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமைதாங்குகிறார்.
கடந்த 30ம் தேதி ரூ. 480 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத கருணாநிதி மத்திய அரசுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு அதிமுக தொடர்ந்து எதிர்ப்புத்தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.