பூந்தமல்லி நீதிமன்றத்தில் தமிழுக்கு மரியாதை!
சென்னை:
பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் தமிழிலேயே வாதிடலாம் என்று நீதிபதி தேவதாஸ் அறிவித்துள்ளார்.
பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதிராஜேந்திரனின் மறைவையடுத்து, தேவதாஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இந் நிலையில் தர்மபுரி நக்சலைட்டுகள் மீதான பொடா வழக்கு விசாரணைக்கு வந்தது.
நக்சலைட்டுகள் சார்பில் பெண் வழக்கறிஞர் செங்கொடி ஆஜரானார். தனது வாதத்தின்போது ஆங்கிலத்தில்பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
இதைப் பார்த்த நீதிபதி தேவதாஸ், நானும் தமிழன். அதேபோல நீங்களும் தமிழர். எனவே அழகான தமிழிலேயேஉங்களது வாதத்தை எடுத்து வைக்கலாம். தேவைப்பட்டால் ஆங்கிலத்தில் பேசலாம். தமிழில் பேச தடை இல்லைஎன்றார்.
இதைக் கேட்டதும் நீதிமன்றத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்கள், போலீஸார், நக்சலைட்டுகளில் சிலரும் கூட கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications