வழிப்பறி சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்களை கத்தி முனையில் வழிமறித்து கொள்ளையடித்த சப்-இன்ஸ்பெக்டர்மற்றும் ஏட்டையா உள்ளிட்ட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி மாலை காற்று வாங்க வந்த இரண்டு இளம்பெண்களை சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு சிங்காரராஜன், அவரது நண்பர் திருவாசகம் ஆகியோர்வழிமறித்து சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.
பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்கவும் முயன்றனர்.
இதைத் தொடர்ந்து பொது மக்கள் 3 பேரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இவர்கள் மீதான வழக்கைஎழும்பூர் நீதிமன்றம் விசாரித்தது.
மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய சப் இன்ஸ்பெக்டரே வழிப்பறியில் ஈடுபட்டதைக் கண்டித்த நீதிபதி, 3பேருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications