For Daily Alerts
Just In
டெஸ்மா, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!
சென்னை:
டெஸ்மா சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, தமிழ்நாடு அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச்சட்டத்தை (டெஸ்மா) தமிழக அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. ஆனால் அரசு தொடர்ந்து இச் சட்டத்தை நீட்டித்து வருகிறது.
இந் நிலையில் டெஸ்மா சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Comments
Story first published: Wednesday, February 2, 2005, 5:30 [IST]