For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருணா: டாக் ரவிக்கு 5 மணி நேர போலீஸ் காவல்!

By Staff
Google Oneindia Tamil News

தென்காசி:

ஆலடி அருணா கொலை வழக்கில் கைதாகியுள்ள டாக் ரவி என்ற குற்றவாளியை 5 மணி நேரம் மட்டும் காவலில் வைத்து விசாரிக்கபோலீசாருக்கு தென்காசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ. ராஜா கைது செய்யப்பட்டுள்ள.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக் ரவி என்பவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்க அனுமதிக்கக் கோரி ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சோமசேகரன், தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

அவரது மனுவைப் பரிசீலித்த நீதிபதி அனில்குமார், டாக் ரவியை 5 மணி நேரம் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.இதைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ரவி போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

தீவிர விசாரணைக்குப் பின்னர் இரவு 8.30 மணியளவில் நீதபதி முன் ரவி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில்அடைக்கப்பட்டான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X