போலீஸ் ஸ்டேனுக்கு வந்த முதலிரவு பிரச்சனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதலிரவை எங்கே நடத்துவது என்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் அதற்கு தீர்வு கூறுமாறு காவல் நிலையத்தை நாடியது ஒரு புதுமணத்தம்பதி.

இந்த வித்தியாசமான சம்பவம் சென்னையில் நடந்தது.

சிந்தாதிரிப்பேட்டைச்ை சேர்ந்தவர் ராஜு. இவருக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. தேவாலயத்தில்திருமணம் நடந்த பின்னர் முதலிரவை தங்கள் வீட்டில் கொள்ளலாம் என்று மாப்பிள்ளை வீட்டார் கூறினர்.

ஆனால், தங்களது வீட்டில்தான் வைக்க வேண்டும் என்று பெண் வீட்டார் கூறினர்.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறில் போய் முடிந்தது. அடிதடியும் ஏற்பட்டது.

இதையடுத்து புதுமணத் தம்பதியினரும், அவர்களது பெற்றோரும் காவல் நிலையம் சென்று போலீஸாரிடம் முறையிட்டனர். தங்களதுபிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கூற வேண்டும் என்ற கோரினர். இந்த வித்தியாசமான கேஸால் போலீசார் பரபரப்பாயினர்.

காவல் நிலையத்தில் இருந்த பெண் போலீஸாரை அழைத்த இன்ஸ்பெக்டர் இந்தப் பிரச்சனையை பேசித் தீர்க்குமாறு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டாரையும், பெண் வீட்டாரையும் அழைத்து பெண் போலீஸார் சமரசம் செய்தனர். முதலிரவை எங்குவைப்பது என்பதை தம்பதியே முடிவு செய்யட்டும். இதில் பெற்றோர் தலையிட வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+