விஜயேந்திரருக்கு பிப்.10 வரை காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயேந்திரர் உட்பட 15 பேரின் நீதிமன்றக் காவலை காஞ்சிபுரம் முதலாவதுகுற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ் வருகிற 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயேந்திரர் உட்பட 15 பேரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.இதையடுத்து அவர்கள் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.
அப்போது அவர்களது காவலை வருகிற 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார். அதனையடுத்து விஜயேந்திரர்சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
திரவி காவல் நீட்டிப்பு:
அதே போல சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவி சுப்பிரமணியத்தின் காவலை வரும் 10 ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications