சங்கரராமன் குடும்பத்துக்கு நிதி தந்தது ஏன்? ஜெ. விளக்கம்
சென்னை:
சங்கரராமன் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கியது ஏன் என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்றுவிளக்கமளித்தார்.
சங்கரராமன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கிய ஜெயலலிதா, சுதர்சனம் எம்.எல்.ஏ. குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் மட்டும்வழங்கியது ஏன் என்று பாஜக எம்.எல்.ஏ. எச். ராஜா நேற்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு இன்று பதிலளித்த ஜெயலலிதா,
சங்கரராமன் மனைவி பத்மா என்னிடம் அளித்த மனுவில், கணவர் கொல்லப்பட்டதால் மகள் தனது கல்வியைத் தொடரமுடியவில்லை என்றும் செலவுகளை சமாளிக்க முடியாமல் வறுமையில் வாடுவதாகவும் கூறியிருந்தார். இதனைப் பரிசீலித்துமுதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ 5 லட்சம் வழங்க உத்தரவிட்டேன்.
ஆனால் மறைந்த எம்.எல்.ஏ. சுதர்சனத்தின் குடும்பம் வறுமையில் சிக்கித் தவிக்கவில்லை. எனவே அவரது குடும்பத்தாருக்குசட்டத்திற்குட்பட்டு ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டேன் என்று கூறினார்.