கமிஷனருக்கு கொலை மிரட்டல்: அல்-உம்மா தொண்டர் கைது
கோவை:
கோவை மாநகர காவல்துறை ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்த அல்-உம்மா தொண்டர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாநகர காவல்துறை ஆணையருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கொலை மிரட்டல் கடிதம் வந்தது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (குண்டர் சட்டம்) கைது செய்யப்பட்ட 24 பேரைவிடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆணையர் வெடிகுண்டு வீசி கொல்லப்படுவார் என்று அதில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கடிதத்தை அனுப்பிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தரிஸ்வான் முஹைதீன் என்பவர் சிக்கினார்.
இவர் ஒரு மீன் வியாபாரியாவார், அல் உம்மா அமைப்பின் தீவிர ஆதரவாளராகவும், தொண்டராகவும் உள்ளார்.
கைது செய்யப்பட்ட ரிஸ்வானின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆவணங்கள் கிடைத்தன.
இவர் மீது ஒரு பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன.












Click it and Unblock the Notifications