சங்கரராமன்: மேலும் ஒருவருக்கு குண்டாஸ்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

சங்கரராமன் கொலை வழக்கில் கைதானவர்களில் மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜெயேந்திரர் மட்டுமே ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

இந்த 26 பேரில் விஜயேந்திரரின் தம்பி ரகு, காஞ்சி சங்கர மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர், கதிரவன், சின்னா, அம்பிகாபதி,மாட்டு பாஸ்கர், அனில், மீனாட்சிசுந்தரம், குமார், ஆனந்தகுமார் ஆகிய 10 பேர் மீது குண்டர் சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நேற்று அப்பு, தில் பாண்டியன் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் போலி குற்றவாளிஆறுமுகத்தையும் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

எஸ்.பி. பிரேம்குமாரின் பரிந்துரையின் பேரில் இதற்கான உத்தரவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் வெளியிட்டார்.இதையடுத்து சங்கரராமன் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+