ராமதாஸ், திருமா ஏமாற்று பேர்வழிகள்: கிருஷ்ணசாமி
சென்னை:
தமிழின் பெயரால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அரசியல்செய்து வருவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் திருமாவளவனுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கிருஷ்ணசாமி இப்போது தனி மரமாய் நிற்கிறார். சண்டியர்படத்தின் தலைப்பை வைத்து திரையுலகுடன் மோதினார். இப்போது அதே ஆயுதத்தை திருமாவளவன் எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்தப் பின்னணியில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது:
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில், டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர்சேதுராமன் ஆகியோர் தமிழை வளர்ப்பதாக நடிக்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் தமிழை வளர்க்க நினைக்கவில்லை, அரசியல்செய்ய முயல்கிறார்கள்.
3 பேருக்கும் தமிழ் குறித்த சிந்தையே கிடையாது. அவர்களது செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது. மூன்று பேரும் சேர்ந்து மக்களைஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றார் கிருஷ்ணசாமி.
திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்:
இதற்கிடையே 10 ஆண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு திட்டக்குடி மாஜிஸ்திரேட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
.அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
கடலூர் மாவட்டம் பெண்ணாகரம், ஆவினன்குடி ஆகிய பகுதிகளில் கடந்த 1992ம் ஆண்டு நடந்த வன்முறை மற்றும் கலவரம் ஆகியவைதொடர்பாக திட்டக்குடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திருமாவளவன், இணை பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் மற்றும் குமார்ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை பலமுறை சம்மன் அனுப்பியும் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந் நிலையில், மீண்டும்வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி அய்யப்பன், 3 பேரையும் ஆஜர்படுத்துமாறு கூறி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
அந்த உத்தரவில், உங்கள் 3 பேருடைய சொத்துக்களையும் ஏன் ஜப்தி செய்யக் கூடாது, உங்களை தலைமறைவான குற்றவாளிகளாக ஏன்அறிவிக்கக் கூடாது என்றும் நீதிபதி கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications