சுனாமிக்குப் பின்: விவேகானந்தர் பாறைக்கு மீண்டும் படகு சர்வீஸ்
கன்னியாகுமரி:
சுனாமி தாக்குதலையடுத்து கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுப் போக்குவரத்து மீண்டும்தொடங்கியது.
படகுப் போக்குவரத்து துவங்குவதையொட்டி விவேகானந்தர் பாறையிலும், திருவள்ளுவர் சிலை உள்ள பாறையிலும் சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டன.
தாமிரபரணி, பாகீரதி ஆகிய படகுகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஸ்வநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், நயினார் நாகேந்திரன், ஜெயராமன், நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் சுனில்பாலிவால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுனாமி தாக்குதலின்போது கடலில் மூழ்கிய விவேகானந்தா படகுக்கு பதிலாக நவீன வசதிகளுடன் புதிய படகு வாங்கப்படும்என்று விஸ்வநாதன் அப்போது தெரிவித்தார்.
படகுப் போக்குவரத்தை தொடங்குவதையொட்டி திருவள்ளுவர் சிலை வளாகத்தில் உணவக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.விரைவில் விவேகானந்தர் பாறையிலும் சுற்றுலா துறை சார்பில் மினி ஓட்டல் திறக்கப்படும் என்று அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் பாறைக்குச் செல்ல படகில் பயணம் செய்யும் நபர் ஒருவருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.