For Daily Alerts
Just In
சங்கரராமன் கொலை: மேலும் ஒருவருக்கும் குண்டாஸ்!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இதுவரை 15 பேர் குண்டர் சட்டத்தின்கீழும் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
இந்த வரிசையில் சில்வஸ்டர் ஸ்டாலின் என்பவரும் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சங்கரராமன் கொலைவழக்கில் 23வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் ஆவார்.
இதனால் இந்தக் கொலையில் குண்டர் சட்டத்தில் உள்ளே போனவர்கள் எண்ணிக்கை 16 ஆகிவிட்டது.
சில்வஸ்டர் ஜாமீன் மனு தள்ளுபடி:
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி சில்வஸ்டர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை செங்கல்பட்டுநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
Story first published: Tuesday, February 8, 2005, 5:30 [IST]