காஞ்சி மடத்தில் "வாஸ்து கண்ணாடிகள்"!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வாஸ்து சாஸ்திரப்படி கண்ணாடிகளைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், கணக்காளர் காலடிவிஸ்வதிாத அய்யர் உள்ளிட்ட சங்கர மடத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜெயேந்திரர் மட்டுமேஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

இருப்பினும் அவரும் தற்போது கலவையில் தான் தங்கியுள்ளார்.

சங்கர மடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இத்தனை பிரச்சினைகள் அடுத்தடுத்து நடந்து வருவதற்கு வாஸ்துவும் ஒருகாரணம் என்று எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து வாஸ்துவை சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து 7 வாஸ்து நிபுணர்களை காஞ்சிபுரத்திற்கு வரவழைத்துள்ளனர். மடத்தில்வாஸ்து பார்த்த அவர்கள், வாஸ்து கண்ணாடிகளை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்மூலம் சங்கர மடத்திற்கு எதிரான சக்திகள்" ஒழிந்து போய் விடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்துவிரைவில் இந்தக் கண்ணாடிகள் பொறுத்தப்படலாம் என்று தெரிகிறது.

ஜெயேந்திரர் கலவையில் இருப்பதாலும், விஜயேந்திரர் சிறையில் இருப்பதாலும், சங்கர மடத்தில் பெரிய அளவில் உற்சாகம்இல்லை, வழக்கமான பணிகள் அங்கு நடக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+