ஜெயேந்திரருக்கு தேன் வழங்கிய நரிக் குறவர்கள்!
கலவை:
ஜெயேந்திரரை நரிக் குறவர்கள் சந்தித்து அவருக்கு தேன் வழங்கினார்கள்.
கலவை மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரரை தினமும் பல தரப்பினரும் சந்தித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று அவரைச்சந்திக்க வித்தியாசமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
நரிக் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 25 பேர் ஆற்காட்டிலிருந்து ஜெயேந்திரரைப் பார்க்க வந்தனர்.
வழக்கமான நாட்களில் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்திற்கு இவர்கள் வந்திருந்தால் உள்ளே நுழைய அனுமதிகிடைத்திருக்காது. ஆனால் சங்கரராமன் கொலையால் ஜாமீனில் கலவை மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரரை சந்திக்கஉடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.
ஜெயேந்திரரை பார்த்து கும்பிட்டவாறே சென்ற நரிக் குறவர்கள் அவரிடம் தாங்கள் கொண்டு வந்த மலைத் தேனைக்கொடுத்தனர். அவரும் புன்முறுவலுடன் வாங்கிக் கொண்டு அவர்களை ஆசிர்வதித்தார்.
மெளன விரதம் இருப்பதால் அவர்கள் அனைவரையும் சாப்பிட்டு விட்டுச் செல்லுமாறு சைகையால் கூறினார் ஜெயேந்திரர்.
இதையடுத்து மீண்டும் அவரை கும்பிட்டுவிட்டு மடத்திற்குள் சென்று சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர் நரிக் குறவர்கள்.
நரிக் குறவர்களில் ஒருவர் கூறுகையில், கடவுளுக்கு சமமாக நாங்கள் ஜெயேந்திரரை நினைக்கிறோம். அவரைப் பார்ப்பதற்காகபல ஆண்டுகள் காத்திருந்தோம். இப்போதுதான் பார்க்க முடிந்தது என்றார்.
இதுவரை நரிக் குறவர் சமூகத்தைச் சேர்ந்த யாரும் ஜெயேந்திரரை சந்திக்க அனுமதிக்கப்பட்டதில்லை, அவரும் சந்தித்ததில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications