For Daily Alerts
Just In
அவசரமாய் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
மும்பை:
துபாயில் இருந்து கொச்சின் வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் மும்பையில் அந்த விமானம் மிகஅவசரமாகத் தரையிறங்கியது.
அந்த ஏர் பஸ் 310 ரக விமானத்தின் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து விமானத்தை மும்பை சத்ரபதி சர்வதேச விமானத்திலேயே தரையிறக்கிவிட விமானி முடிவு செய்தார். ஹைட்ராலிக் கோளாறுகாரணமாக சக்கரங்கள் வெளியில் வருவதில் பிரச்சனை எழலாம் என்பதால் விமான நிலையம் அவசரகால நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆம்புலன்ஸ்கள் உள்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந் நிலையில் அதிகாலை 3.50 மணிக்கு அந்த விமானம்பத்திரமாக தரையிங்கியது.
இதையடுத்து நிம்மதிப் பெருமூச்சவிட்ட அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை அடுத்த 3 மணி நேரத்தில் வேறு விமானத்தில்கொச்சினுக்கு அனுப்பி வைத்தனர்.
Comments
Story first published: Thursday, February 10, 2005, 5:30 [IST]