For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி கொண்டு வந்த புத்தர் சிலை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கல்பாக்கம் கடலோரப் பகுதியில் 6 அங்குல உயரமுள்ள புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது மியான்மர் நாட்டைச் சேர்ந்ததாகஇருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த 6 அங்குல உயர வெண்கலச் சிலையை அப்பகுதியினர் கண்டெடுத்தனர். இதை தேசிய கடலாராய்ச்சி நிறுவனத்தினரிடம்வழங்கினர்.

அந் நிறுவனத்தைச் சேர்ந்த 2 மூத்த விஞ்ஞானிகள் அச் சிலையை ஆராய்ந்து வருகின்றனர். சசிசேகரன் என்ற விஞ்ஞானிசெய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஒரு பெட்டியினுள்ளே இந்த சிலை இருந்தது. அந்தப் பெட்டியில் பூக்களை வைப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் 2 கூடைகள்இருந்தன. மேலும் துறவிகள் பயன்படுத்தும் 2 பொருட்களும் இருந்தன.

பர்மீஷ் மொழியைப் போன்று எழுத்து வடிவுடன் சில காகிகதங்களும் இருந்தன. எனவே இந்த சிலை சுனாமி அலை மூலமாகமியான்மர் கடலோரப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.

இந்த சிலை குறித்து இந்திய தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வஜ்ராசனம் நிலையில், புத்தர் போன்ற உருவ அமைப்புடன் இச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலை இப்போது கல்பாக்கம்கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் அதைப் பார்க்க ஆர்வமுடன் வருகிறார்கள் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X