பகவதி அம்மன்: தரிசன கட்டணத்துக்கு தடை
மதுரை:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்புத் தரிசனத்திற்கு கட்டணம் வசூலிப்பதற்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளைஇடைக்காலத் தடை விதித்துள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த சிவதானு செட்டியார் மற்றும் 2 பேர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல்செய்தனர்.
அதில், எங்கள் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்புத் தரிசனத்திற்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது இயற்கைக்கு முரணானது.
ஏழை, பணக்காரர் பாகுபாட்டை பிரதிபலிக்கும் விதமாக இந்த வசூல் உள்ளது. எனவே இதை தடை செய்ய வேண்டும் என்றுகோரியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், கட்டண வசூலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோவில் நிர்வாக ஆணையர், இந்து அறநிலையத்துறை செயலாளர்உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications