For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாலை விபத்தில் படு காயம்: அமைச்சர் மகன் பலி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழக கால்நடைத்துறை அமைச்சர் தாமோதரனின் மகன் பிரகாஷ் சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றுஉயிரிழந்தார்.

கோவை பீளமேடு பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்த பிரகாஷ், கடந்த 2ம் தேதி கல்லூரியில் இருந்துமோட்டார் சைக்கிளில் வெளியே சென்றபோது அவர் மீது வேன் மோதியது.

இதில் படுகாயமடைந்த அவர் பிஎஸ்ஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை மோசமானதால் சென்னைஅப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் கோவைக்கு வந்து சிகிச்சையளித்தனர்.

ஆனால், சுய நினைவு திரும்பாமல் கோமாவிலேயே இருந்த பிரகாஷ் சிகிச்சைகள் பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.இதையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து உடல் கோவை மின் மயானத்திலேயே தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு அமைச்சர் தாமோதரனுக்கு ஆறுதல் கூறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X