ஒரே வாரத்தில் 1,000 பொது கூட்டங்கள்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக ஆட்சியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் 1,000 கண்டனக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுகதலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் கருணாநிதி
செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அதிமுக ஆட்சியில் சட்டசபையிலும் ஜனநாயகம் இல்லை. எனவே மக்கள் விரோத, எதேச்சதிகார அதிமுக ஆட்சிக்கு எதிராக மார்ச் மாதம்முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் 1,000 கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்ட வேண்டும் என்று கோருவதில் தவறில்லை. தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும் என்றுவேண்டுகோள் விடுக்கலாம், ஆனால் வன்முறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications