புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருநள்ளூர் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள திருநள்ளூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. முத்து மாரியம்மன் கோயில் அருகே நடந்த இந்தஜல்லிக்கட்டில் ஏராளமான காளை மாடுகள் கலந்து கொண்டன. இளைஞர்கள் போட்டி போட்டு காளைகளை பிடிக்க முயன்றனர்.
இதில் ராஜு, செல்லையா (இருவருக்கும் வயது 41) ஆகியோர் மாடுகள் முட்டி பலியாயினர். மேலும் 120 பேர் காயமடைந்தனர்.அனைவரும் திருச்சி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications