மேலவளவு கொலை: 17 பேரின் ஜாமீன் ரத்து
மதுரை:
மதுரை மேலூர் அருகே மேலவளவு கிராம தலித் பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 17 பேருக்குவழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்தும், அவர்களை ஒரு வாரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூர் அருகே உள்ள மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் தலித் வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர்தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைப் பொறுக்க முடியாத இன்னொரு வகுப்பைச் சேர்ந்த சிலர் கடந்த 1997ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிமுருகேசன் உள்ளிட்ட 6 பேரை படுகொலை செய்தனர்.
இந்த பயங்கர கொலை தொடர்பாக 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. முதலில் இந்த வழக்கை மதுரை எஸ்.சி, எஸ்.டி நீதிமன்றம்விசாரித்து வந்தது. ஆனால் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று முருகேசன் உள்ளிட்டவர்களின் உறவினர்கள் சென்னைஉயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு சேலத்திற்கு மாற்றப்பட்டது.
சேலம் நீதிமன்றம் விசாரணை நடத்தி 17 பேர் மீதான குற்றச்சாட்டுக்களை ஊர்ஜிதம் செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 13பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தண்டனை விதிக்கப்பட்ட 17 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். தண்டனையை ரத்து செய்யுமாறு கோரியஅவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யுமாறும் கோரினர். மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் 17பேரையும் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து முருகேசன் உள்ளிட்டோரின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஜாமீனை ரத்து செய்யுமாறுஅவர்கள் கோரினர். இதை விசாரித்த நீதிபதிகள் பி.என்.அகர்வால், பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,
17 பேருக்கும் கொடுக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அவர்களை 1 வாரத்திற்குள் கைது செய்யுமாறும் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது.
17 பேரும் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை இன்னும் ஒரு மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு சென்னைஉயர்நீதிமன்றத்திற்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications