For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயேந்திரர் நாளை காவல் நிலையத்தில் கையெழுத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Vijayendrarசங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகி, சென்னையில் தங்கியுள்ள விஜயேந்திரர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நாளை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடவுள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கில் கைதான விஜயேந்திரரை சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது. சென்னையில்தங்கியிருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும் என்பதுஅவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஒன்று.

அதன்படி நாளை முதல் முதலாக ஆயிரம் விளக்கு காவல் நிலையம் சென்று விஜயேந்திரர் கையெழுத்துப் போடவுள்ளார். காலை 10மணிக்கு விஜயேந்திரர் கையெழுத்துப் போட வேண்டும்.

விஜயேந்திரர் கையெழுத்துப் போட வருவதால் ஆயிரம் விளக்கு காவல் நிலையப் பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு போலீஸார் ஏற்பாடுசெய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X