குருமூர்த்தி மீது வழக்கு: பிரேம்குமார் விளக்கம்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலையில் உண்மையான குற்றவாளிகளை போலி குற்றவாளிகள் என்று கூறி போலீஸாரை திசை திருப்ப முயன்றதால்தான்ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார்கூறியுள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி மீது 3 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் பதிவுசெய்துள்ளனர். அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆசிரியர், நிர்வாகஇயக்குநர் உள்ளிட்ட 4 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குருமூர்த்தி மீது திடீரென வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து பிரேம்குமார் கூறுகையில்,
போலீஸ் விசாரணைக்கு குருமூர்த்தியை அழைத்தபோது அவர் கதிரவன், ரஜினி என்ற சின்னா ஆகிய இருவரும் போலி குற்றவாளிகள்என்று தெரிவித்தார்.
சரி, அப்படியானால் உண்மையான குற்றவாளிகள் யார் என்று கேட்டபோது அவர் பதில் கூற மறுத்து விட்டார். இதன் மூலம் உண்மையானகுற்றவாளிகள் யார் என்று தனக்குத் தெரிந்த தகவலை போலீஸாரிடம் அவர் மறைத்து விட்டார்.
மேலும், போலீஸ் விசாரணையின் வீடியோ பதிவை தனக்குத் தருமாறு கூறி ரூ. 1,000 காசோலையையும் எனக்கு அனுப்பினார். அத்தோடுவக்கீல் நோட்டீஸும் அனுப்பினார்.
தன்னை விசாரணைக்கு அழைத்தது செல்லாது என்று கூறி அதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் நோட்டீஸ்அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜிடம் இதுகுறித்து புகார் செய்யப்பட்டது. குருமூர்த்தியிடம்நடத்தப்பட்ட விசாரணை அடங்கிய வீடியோவும் நீதிபதிக்கு போட்டுக் காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து குருமூர்த்தி மீது வழக்குப் பதிவுசெய்ய நீதிபதி அனுமதி அளித்தார் என்றார் பிரேம்குமார்.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி












Click it and Unblock the Notifications