சுனாமி பாதித்த நாகையில் மாதா அமிர்தனந்தமயி

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டிணம்:

நாகப்பட்டிணத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாதா அமிர்தனந்தமயி பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகேட்டார்.

சுனாமி நிவாரணத்துக்காக இவரது ஆஸ்ரமம் ரூ. 100 கோடி செலவிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாகூர் அருகே உள்ள பட்டினச்சேரி, சாமந்தன்பேட்டை, நம்பியார் நகர் மற்றும் அக்கரைப்பேட்டை ஆகிய பகுதிகளை மாதாபார்வையிட்டார். சுமார் 10 மணி நேரம் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அவர், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன் சுமார் 500 வெளிநாட்டு பக்தர்களும் உடன் வந்தனர். தனது மடத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளைபார்வையிட்ட மாதா, அவற்றை வேகப்படுத்தவும் உத்தரவிட்டார்.

சாமந்தன்பேட்டையில் மாதா அமிர்தனந்தமயி மடம் 100 தாற்காலிக இருப்பிடங்களை அமைத்து மீனவர்களை குடியேற்றியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1,300 வீடுகள் கட்டித் தரவும், சுனாமியால் கணவனை இழந்த 100 பெண்களுக்கு மாதம் ரூ. 450 ஓய்வூதியம்தரவும் மடம் திட்டமிட்டுள்ளது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக இல்லங்கள் கட்டுவதோடு, குழந்தைகளை இழந்த பெண்களுக்கு அதில் வேலைவாய்ப்புகளைஅளிக்கவும் இந்த மடம் முடிவு செய்துள்ளது.

10ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் அஸிஸ்டெண்ட் வேலைவாய்ப்பைத்தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+