For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.ஏ. ராஜா மருத்துவமனையில் அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

ஆலடி அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல கல்வி நிறுவன அதிபர் எஸ்.ஏ. ராஜா உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ராஜா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜாவின் ஜாமீன்மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து விட்டது.

அதே நேரத்தில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டால் நெல்லை அல்லது மதுரையில் தனியார் மருத்துவமனையில்சிகிச்சை பெறலாம் என்றும் நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந் நிலையில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அவர் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X