For Quick Alerts
For Daily Alerts
Just In
பள்ளியில் தீ: 65 மாணவர்களைக் காத்த ஆசிரியை
வேலூர்:
திருப்புத்தூர் அருகே ஒரு பள்ளியில் தீப் பிடித்துக் கொண்டது. மாணவர்களை ஆசிரியை ஒருவர் மிக வேகமாக வெளியேற்றியதால் 65சிறுவர், சிறுமியர் உயிர் தப்பினர்.
வேலூர் மாவட்டம் அச்சமங்கலத்தில் உள்ள ஊராட்சி நடு நிலைப்பள்ளியில் இன்று காலை 11.30 மணியளவில் திடீரென தீப் பிடித்துக்கொண்டது.
சத்துணவுக் கூடத்தில் இருந்து பரவியதாகக் கருதப்படும் தீ முதலில் 5ம் வகுப்பு அறையில் பிடித்தது.
அப்போது வகுப்பை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை காஞ்சனா அங்கிருந்த 65 மாணவ, மாணவிகளையும் உடனடியாகவெளியேற்றினார்.
ஒரிரு நிமிடங்களில் வகுப்பில் இருந்த அனைவரையும் அவர் பத்திரமாக வெளியேற்றிவிட்டு கடைசியில் தான் வெளியே வந்தார். இதில்ஆசிரியை காஞ்சனாவுக்கு லேசான தீக் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments
Story first published: Monday, February 14, 2005, 5:30 [IST]