மாணவி தற்கொலை முயற்சி: மாணவன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன்னைக் காதலிப்பதாக பகிரங்கமாக சொல்லும்படி மாணவர் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்துமாணவன் கைது செய்யப்பட்டார்.

சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருபவர் லட்சுமணன். நன்றாகப் படிக்கும் இந்தமாணவன், அதே நேரத்தில் பிறரை கிண்டலடிப்பது, குறிப்பாக மாணவிகளிடம் சில்மிஷம் செய்வதிலும் தீவிரமாக இருந்துள்ளார்.

இந் நிலையில் உடன் படிக்கும் ஒரு மாணவியை (இவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞரின் மகள், பெயர் விபரம் மறைக்கப்பட்டுள்ளது)தொடர்ந்து கேலி செய்து சீண்டி வந்துள்ளார்.

இந் நிலையில் காதல் தினமான நேற்று அந்த மாணவியிடம் சென்ற லட்சுமணன், நீ என்னைக் காதலிப்பதாக வகுப்பறையில் அனைவர்முன்பும் வைத்து சொல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

அந்த மாணவி மறுக்கவே, அவரை மிரட்டியுள்ளார்.

இதனால் மனம் வெறுத்துப் போன அந்த மாணவி வீட்டுக்குச் சென்று பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் சிடலபாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து லட்சுமணனை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவர் மீது ஈவ்டீசிங் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+