ஈரான் மசூதியில் தீ: 59 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தெஹ்ரான்:
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மசூதியில் தீப் பிடித்துக் கொண்டதில் 59 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டவர்கள்படுகாயமடைந்தனர்.
ஷியாக்களின் திருவிழாவான ஆசூராவை யொட்டி தெஹ்ரானின் ஆர்க் மசூதியில் ஏராளமானவர்கள் கூடி தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர்.
வெளியில் கடும் பனி கொட்டியதால் மசூதியில் ஹீட்டர்கள் ஆன் செய்யப்பட்டிருந்தன. இதில் பெண்கள் பகுதியில் ஒரு ஹீட்டரில் தீப்பிடித்துக் கொண்டது. மளமளவென ஆண்கள் பகுதிக்கும் அந்தத் தீ பரவியது.
இதில் 59 பேர் பலியாகிவிட்டனர். நெருக்கியடித்துக் கொண்டு ஓடியதில் சுமார் 200 பேர் கீழே விழுந்து காயமடைந்தனர். பலருக்கு தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.
குறுகிய பாதை வழியாக வெளிறே முடியாமல் பலரும் திணறிக் கொண்டிருக்க, புகை கடுமையாகப் பரவியதில் பலர் மயங்கி விழுந்தனர்.இதையடுத்து தீயும் பரவ அவர்கள் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications