தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் 3 கூடுதல் டிஜிபிக்கள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா வெளியிட்டுள்ள உத்தரவில்,
மத்திய அரசின் மறுவாழ்வுத் துறை கூடுதல் டிஜிபியாக உள்ள பி.ஆர். தாபா, மாநில போக்குவரத்து திட்டப் பிரிவு கூடுதல் டிஜிபியாகமாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் திட்ட அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஜெகன் சேஷாத்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தலைமை கண்காணிப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி விபாகர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை சரக டிஐஜியாக பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் சரக டிஐஜி பதவியையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.
கோவை மாநகர ஆணையராக கரண் சிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர தலைமையிட துணை ஆணையராக அவி பிரகாஷ்நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை போலீஸ் பயிற்சிக் கல்லூரி முதல்வராக காவல்துறைக் கண்காணிப்பாளர் சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையராக கிருஷ்ண பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார் என அந்த உத்தரவில்கூறப்பட்டுள்ளது.
சென்னை கலெக்டர் மாற்றம்:
இதுதவிர சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.