வெற்றிகொண்டான் மீதான வழக்கு தள்ளுபடியில்லை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா குறித்து திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யசென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
வழக்கமாகவே தாறுமாறாகப் பேசும் வெற்றி கொண்டான், கடந்த ஆண்டு வேலூரில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது ஜெயலலிதா குறித்து அவர் அவதூறாகப் பேசியதாக போலீஸார் புகார் பதிவு செய்தனர். வேலூர் மாவட்ட செஷன்ஸ்நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
காலம் கடந்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறியும், இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் கோரிவெற்றிகொண்டான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், காலம் கடந்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.
மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்ய அரசு வக்கீலுக்கு கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி முதலமைச்சர் அனுமதிவழங்கியுள்ளார். அதற்கடுத்த 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை காலதாமதம் என்று கூற முடியாது. எனவே வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி கூறினார்.












Click it and Unblock the Notifications