ஜெயேந்திரர் முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சென்னை:
திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள மனுவை சென்னை செஷன்ஸ்நீதிமன்றம் வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியிருக்கும் ஜெயேந்திரரை, திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில்போலீசார் கைது செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து கைதாகாமல் தப்ப முன் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ்நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது பலமுறை அரசு தரப்பு வாய்தா வாங்கியுள்ள நிலையில், இன்று மீண்டும் நீதிபதி முருகேசன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர் டி.வி.கணேஷ் ஆஜராகி, கடைசி முறையாக வாய்தா கேட்கிறேன். இந்த வழக்குக்குத் தொடர்புடைய மேலும்சில மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
எனவே அதுவரை வழக்கை ஒத்தி வைக்க வேண்டும். அதுவரை ஜெயேந்திரர் கைது செய்யப்பட மாட்டார் என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகேசன், வழக்கை 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.