செக்ஸ் சதுர்வேதிக்கு ஜாமீன்: ஆனாலும் வெளியே வர முடியாது
சென்னை:
23க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள செக்ஸ் லீலை சாமியார் சதுர்வேதி சுவாமிக்கு சென்னை சைதாப்பேட்டைநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இருப்பினும் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால் ஒரு வருடத்துக்கு வெளியே வர முடியாது.
திருச்சியைச் சேர்ந்த சதுர்வேதி சுவாமி, சென்னை தி.நகரில் ஆசிரமம் நடத்தி வந்தார். ஆசிரமம் நடத்த இடம் தந்த தொழிலிதிபர் சுரேஷின்மனைவி மற்றும் டீன் ஏஜ் வயது மகளை ஹைதராபாத்துக்கு கடத்திச் சென்று அவர்களை பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்தினார்.
சுரேஷ் கொடுத்த புகாரின் பேல் சதுர்வேதியை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து தங்களை சதுர்வேதி எப்படியெல்லாம்பாலியல்ரீதியில் துன்புறுத்தினார் என்பதை பல பெண் பக்தைகளும், ஆண் பக்தர்களும் போலீசாரிடம் புகார்களைக் குவித்தனர்.
ஹோமா செக்ஸ், குரூப் செக்ஸ் என எல்லா வகையான காமக் களியாட்டம் போட்டிருக்கிறார் சதுர்வேதி.
இதையடுத்து இவர் மீது சைதாப்பேட்டை 11வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மொத்தம் 23 பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவாயின.
இதைத் தொடர்ந்து குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் கைது செய்யப்பட்டு 90 நாட்களைத் தாண்டியும் இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததைக் காரணம் காட்டிதன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சதுர்வேதி மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. சதுர்வேதியுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட மேலும் 4பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், சதுர்வேதி குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டிருப்பதால் ஜாமீன் கிடைத்தும் அவரால் விடுதலையாக முடியாது.












Click it and Unblock the Notifications