ஜெவுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் சந்திப்பு: சுனாமி நிதி வழங்கினார்!
சென்னை:
ஆடிட்டர் குருமூர்த்தி விவகாரம் தொடர்பாக சமீபத்தில் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸாரால் விசாரிக்கப்பட்ட, த நியூ இந்தியன்எக்ஸ்பிரஸ் நிர்வாக இயக்குனர் மனோஜ் குமார் சொந்தாலியா முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து, சுனாமி நிவாரண நிதிக்கு ரூ. 80லட்சத்தை வழங்கினார்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரசில் எழுதிய கட்டுரைகள் தொடர்பாக அவர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையை திசை திருப்பும் வகையில், தவறான தகவல்களைத் தந்ததாக குருமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தவிவகாரம் தொடர்பாக பத்திக்கையாளர் சோ, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனோஜ் குமார்சொந்தாலியா ஆகியோரை காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் சமீபத்தில் விசாரித்தனர்.
இந் நிலையில், சொந்தாலியா இன்று கோட்டைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அவரிடம் இந்தியன்எக்ஸ்பிரஸ்-தினமணி உள்ளிட்ட தங்களது நாளிதழ்கள் மூலம் வசூலிக்கப்பட்ட சுனாமி நிவாரண நிதி ரூ. 80 லட்சத்திற்கான காசோலையைவழங்கினார்.
அவருடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆசிரியர் கமலேந்திர கன்வாரும் உடனிருந்தார்.
அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை இருவரும் தனியே சந்தித்து சிறிது நேரம் பேசினர்.
போலீஸ் விசாரணைக்குப் பின் இச் சந்திப்பு நடந்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications