தேர்தலை சந்திக்க ஜெ தயாரா? ராமதாஸ் சவால்
திண்டிவனம்:
தைரியம் இருந்தால் சட்டசபையை கலைத்து விட்டு இப்போதே தேர்தலை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா தயாரா?என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில்தேர்தல் வரும். அப்போது இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு காண்கிறார் ஜெயலலிதா.
ஆசைப்படுவதற்கும் ஒரு அளவு உள்ளது. எல்லோரும் கனவு காணலாம். அதேபோல ஜெயலலிதாவும் கனவுகாண்கிறார்.
ஆனால் இரு தேர்தல்களிலும் வெற்றி பெறலாம் என்பதை கனவில் மட்டுமே ஜெயலலிதா நினைத்துப் பார்க்கமுடியும். மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு முழுமையான பதவிக் காலத்தை பூர்த்தி செய்யும். இடையில்தேர்தல் வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜெயலலிதாவின் ஆசை நிச்சயம் நிறைவேறாது.
வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு நாடே மாறி விட்ட நிலையில் வாக்குச் சீட்டுக்குப் போகச் சொல்கிறார் ஜெயலலிதா.தோல்விகளுக்குப் பிறகு எதையாவது மாற்ற வேண்டும் என்று கூறுவது அதிமுகவின் வாடிக்கையாகி விட்டது.
மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் அரசியல் பண்பாடு. அதை விடுத்து வாக்குப் பதிவுஇயந்திரத்தின் மீது பழி சுமத்துவது மக்களை அவமதிப்பது போலாகும்.
மக்கள் தன் பக்கம்தான் என்று ஜெயலலிதா நினைத்தால் இப்போதே சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலைசந்திக்கத் தயாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
ஜெயலலிதா பேசுவதைப் பார்த்தால் செப்டம்பரில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரலாம் போலத் தெரிகிறதுஎன்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications