தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல்!
பாண்டிச்சேரி:
கடன் தொல்லையால் சிக்கித் தவித்த நகைக் கடை உரிமையாளர் தண்ணீர்த் தொட்டி மீது ஏறி நின்று தற்கொலைசெய்து கொள்ளப் போவதாக மிரட்டியதால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாண்டிச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன் என்பவரின் மகன் இளையராஜா. இவர் நகைக்கடை வைத்திருந்தார். கடையில் சரியான வியாபாரம் இல்லாத்தால் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்.இதனால்கடையை மூடி விட்டார்.
ஆனால், இளையராஜாவுக்கு கடன் கொடுத்தவர்கள் அதைக் கேட்டு நெருக்க ஆரம்பித்தனர். இதனால் தனதுதந்தையிடம் ரூ. 50,000 பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்து விடவே அரியாங்குப்பம் ஓடைவெளிப் பகுதியில் உள்ள 70 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறினார் இளையராஜா. அங்கிருந்து குதிக்கப் போவதாக மிரட்டினார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 6 மணிக்கு தொட்டி மீது ஏறியவர் 3 மணி நேரமாக மிரட்டிக்கொண்டே இருந்தார்.
இந் நிலையில், அரியாங்குப்பம் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி தகவல் அறிந்து அங்கு வந்தார். இளையராஜாவிடம்செல்போனில் அவர் பேசினார். கடன் பிரச்சினையை நான் தீர்த்து வைக்கிறேன். இறங்கி வாருங்கள் என்றுகூறினார். அப்போதும் இளையராஜா அசையவில்லை.
இதையடுத்து, நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் எனது பதவியை ராஜினாமர் செய்கிறேன் எனதனது லெட்டர் பேடில் எழுதி கையெழுத்துப் போட்டத் தருவதாக எம்எல்ஏ ஜெயமூர்த்தி கூறவே இளையராஜாமனம் மாறி கீழே இறங்கி வந்தார்.
கீழே வந்த இளையராஜாவை போலீஸார் ஒரே அமுக்காக அமுக்கி கைது செய்தனர். அவர் மீது தற்கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications