சேலம்: ஐஸ் தொழிற்சாலையில சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி
சேலம்:
சேலம் ஐஸ் கட்டி தயாரிப்பு நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 3 பேர் பலியாயினர்.
சேலம் அரசு பொது மருத்துவமனைக்குப் பின்புறம் சென்ட்ரல் ஐஸ் பார்லர் என்ற ஐஸ் கட்டி தயாரிக்கும் நிறுவனம்உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று காலை கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
இதில் நிறுவன உரிமையாளர் தாமோதரன் உள்ளிட்ட 3 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகபலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர் வெடித்ததால் அதிலிருந்த கிளம்பிய ரசாயன வாயு, ஐஸ் தொழிற்சாலை முழுவதும் பரவி தீப் பிடித்துஎரிகிறது.
இதனால் தீயணைப்புப் படையினரால் உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து அந்த வாயுவை சமன் செய்யும்(நியூட்ரலைசிங் ஏஜென்ட்) செய்யும் வாயுவை செலுத்திவிட்டுத் தான் படையினரால் உள்ளே புக முடிந்தது.
தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.












Click it and Unblock the Notifications