For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர்நீதிமன்றத்தில் அப்புவின் மனைவி வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Appuகுண்டர் சட்டத்தில் தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றுகோரி கூலிப் படைத் தலைவன் அப்புவின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அப்புவின் மனைவி நிர்மலா இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், சங்கரராமன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள எனது கணவர் அப்பு, சட்ட விரோதமாக குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை ஏதுமின்றி எனது கணவரை சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், ராமலிங்கம் ஆகியோர், இதுதொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் மனுதாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X