4 கலெக்டர்கள் அதிரடி டிரான்ஸ்பர்: வாக்களர் பட்டியல் குளறுபடி எதிரொலி
சென்னை:
நீலகிரி, திருவள்ளூர், புதுக்கோட்டை, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலில் பெருமளவு முறைகேடு நடந்தது. பல லட்சக்கணக்கானவர்களின்பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையை நடத்திய கேரள தலைமை தேர்தல் அதிகாரி தாமஸ்தனது அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தார்.
அதில், சில மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அவர் பரிந்துரைத்திருந்தார்.
இதையடுத்து நீலகிரி, புதுக்கோட்டை, தர்மபுரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீது வாக்காளர் பட்டியல் முறைகேடுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து இந்த நான்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டஆட்சித் தலைவராக இருந்த முத்துச்சாமி மாற்றப்பட்டு விஜய ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்பொதுத்துறை (புரோட்டோகால்) செயலாளராக இருந்து வந்தார்.
முதல்வரின் இணை செயலாளாரக இருக்கும் தங்கச்சாமி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அம்மாவட்ட ஆட்சித் தலைவர் குமாஹ் ஜெயந்த் மாற்றப்பட்டுள்ளார்.
எல்காட் நிர்வாக இயக்குனர் சுதீப் ஜெயின் தர்மபுரி ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப் பொறுப்பில்ஆஷிஷ் வச்சானி மாற்றப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை ஆட்சித் தலைவராக இருந்து வந்த ஜதீந்திரநாத் ஸ்வெய்ன் மாற்றப்பட்டு அவருக்குப பதில் ஆர்.தியாகராஜன்அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றப்பட்ட நான்கு மாவட்ட கலெக்டர்களுக்கும் வேறு பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கான பதியபதவிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளார்.
அதுவரை இந்த நான்கு பேரும் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டியது தான்.